கள ஆய்வுகள்
நீலகேசி
- ஆசீவகவாதச்
சருக்கம்
நீலகேசி
குக்குடமா
நகரினின்றும்
சம தண்டம்
சென்று அங்கு
ஆசீவகர்களைச்
சந்தித்து
அவர்களுடைய
சமயக்
கோட்பாடு
களைத்
தெரிந்து
கொள்ளும்
பகுதியிலிருந்து
இங்கு பொருள்
கூறப்பட்டுள்ளது
.
667 ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு
மாண்ட துகிலல்குல் மாத ரிதுசொல்லுங்
காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள் .
அங்கிருந்த
இலிங்கியரை (
துறவியரை )
நோக்கி இந்த
நறு
மணம்
மிகுந்த
பள்ளியில்
வாழ்பவர்
யார் என அழகிய
துகிலுடுத்த
பெண்களிற்
சிறந்தவளான
நீலகேசி
கேட்டாள் .
668 காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும் .
அப்போது
, ஒப்பீடில்லாத
கல்வி நிலையை
உடையவனும்
( செயலுக்கு
) காரணம்
என்பதொன்றை
விரும்பாத துறவிகளுடைய
கூட்டத்தில்
மிக்க அறிவை
அடைந்து , எல்லோரிலும்
முதன்மை
யாக
விளங்குபவனுமான
பூரணன்
என்பவன் , தெய்வப்பெண்
போன்ற
நீலகேசிக்கு
நன்கு
புரியும்படி
கூறுகின்றான்
,
669 புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா
யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்
வியலிடத் தியாரும் வியக்குந் தகையர்
மயலறு காட்சியிம் மாதவ ரென்றான் .
முகிலனைய
கருமையான
கூந்தலை
உடைய
பொற்கொடி
போன்றவளே
!
இங்கிருப்பவர்கள்
இங்கிருப்பவர்கள்
வேறு
மதத்தைச்
சார்ந்தவர்
தாபதரிருடிதடம்
பெயராகும் ”
670 ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்
பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி
னோத்துரை யேயிங் சூரையென் றுரைத்தனள்
சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள் .
ஒப்பில்லாதவளாகிய
நீலகேசி , பூரணனை
நோக்கி , உனது
தலை
னையும்
அவனது ( மத )
நூலையும் அது
கூறும் பொருளையும்
,
( அப்பொருட்களின்
)
நிகழ்ச்சிகளையும்
பகுத்துக்
கூறினால் , அத
னால்
விளையும்
பயன்
பெரியதாகும்
என்றாள் .
671 என்றலு மற்கலி தானே யிறையினி
யொன்பது வாங்கதிர் நூல்யா முடையன
மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை
யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல .
எமது
தலைவன்
மற்கலி, எமக்குரிய
நூல் ஒன்பது
கதிர் .
நிலைபெற்ற
(
நுண்பொருள்கள்
) ஐந்து . அவை
என்றுமே இயல்
பாகவே
உள்ளன .
அவற்றின்
நிகழ்ச்சி
ஆழ்தலும் ( காழ்
) மிதத்தலு
மாகும்.
672 அறிந்தா னிறைவ னனா குதலாற்
செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி
னெறிந்தா னனைய வியல்பா குதலான்
மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி யெனின்
ஆத்தன் " என்று நீலகேசியில் கையாளப்பட்ட சொல்
அருகர் நிலையை அடைந்தவன் , தலைவன் என்ற இருபொரு
ளையும் தரும் .
எமது
தலைவன்
முழுமையும்
அறிந்தவனாதலால்
வாய்
பேசாது
அடங்கியிருக்கின்றான்
. அவன் அவ்விதம்
வாய்பேசாது
அடங்கி
இருக்கவில்லையெனின்
, உயிரினங்களை
வாளால்
எறிந்து
கொன்ற
தன்மையை
அடைவான் 5 . ( அதன்
பயனாக )
மயக்குற்று
மீண்டும் பிறப்பினை , எய்துவான் .
673 உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரைய னகை வானிடுவில் லனையன்
புரையா லறிவிற் புகழ் பூரணனே .
எம்முடைய
இறைவன்
பேசுவதுமில்லை
. உண்பதுமில்லை
அவன்
உடலில் (
முதிர்ச்சியிலான
) சுருக்கமுமில்லை
. நரைய
மில்லை
. அவன் உடல் (
அழகு ) ( ஓவியனால்
) எழுதப்படாத
வானவிற்
போன்றது . (
எமது இறைவனான
) பூரணன் குற்றமில்
லாத
அறிவினாலான
புகழ்
உடையவன் .
674 அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்
கிடந்த கதிருட்கிளந்த பொருணாந்
தொடங்கி யுரையாந் தொகையா குவதே.
யுடங்கே யணுவைந் துருவா யுளதே .
அடங்கல்
, குறிக்கோள்
முதலியனவாகக்
கூறப்பட்ட
நவகதி
ருள்
சொல்லப்பட்ட
பொருள்கள்
பற்றி நாம் தொடக்கத்திலிருந்து
கூறமாட்டோம்
. ஒன்றாகத்
தொகுத்துக்
கூறுவோம் .
ஒருங்கு சேர
நோக்கின்
அணுக்கள்
ஐந்து . அவை
உருவம் உள்ளன.
675 நில நீ ரெரிகாற் றுயிரின் னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம் .
நிலம்
, நீர்
தீ , காற்று
, உயிர்
என்ற
இவ்வணுக்களின்
இயல்பு
பலதன்மையன.
அவற்றிற்குரிய
பாலை ( குணம் )
நோக்கின் , தெளி
வாகத்
தெரிந்து
கொள்கின்ற
ஒலி
ஒன்றினைத் தவிர
ஏனையவை ,
முதலில்
கூறப்பட்டதற்கு
( அதாவது மேலே
கூறப்பட்டவற்றுள்
முதலாகக்
கூறப்பட்ட
நிலத்திற்கு )
உண்டு. நீரிற்குரிய
பால்களுள்
முதலாயது தண்மையாகும் .
676 எறித்தன் முதலா யினதீ யினவாஞ்
செறித்த லிரையோ டிவை காற்றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராங்
குறித்த பொருளின் குணமா லிவையே
தீயினது
பால்களாகச்
சுடுதல்
முதலியவற்றைக்
கூறலாம் .
அறைதலும்
, இரை
தலும் , காற்றினுடைய
பால்களாகும் .
அறிதலும்
அறிவித்தலும்
, உயிரினது
பால்களாகும் .
மேற்கூறியவைதான்
முற்
கூறிய
பொருள்களின்
குணமாகும் .
677 அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை .
அணுக்கள்
ஐந்து .
அவையாவும்
எல்லாக்
குணங்களையு
முடை
யன
அல்ல . ( அவை )
குழுவாகச்
சேரும் , பின்னர்
பிரியும் .
ஒருபொரு
ளில்
இவை
அடங்கினும் (
அதாவது ஒரு
பொருளில் பல
அணுக்கள்
உள்
அடங்கினாலும்
) அவை
ஒன்றனுக்குள்
ஒன்று உள்ளே
நுழை
வதில்லை
. கணம் என்று
கூறினும் ஒரு
காலம் என்ற
கோட்பாடு
இல்லை.
678 இவையே பொருள்க ளிவற்றினியல்பும்
சவையே யறியச் சிலசாற்றுவன்கேள்
சுவையே யுடையம் மெனநீ யிகழல்
லவையே பிறரா லழிதற் கரிய .
மேற்கூறியவைகளே
பொருள்களாகும்
. இவற்றின் இயல்பைப்
பற்றி
இந்த அவையிலுள்ளோர்
அறியும்படிச்
சிலவற்றைக்
கூறு
வேன்
. நீ நாம்
சுவையே
உடையவர்களென (
புலன் வழிப்பட்டவர்
- கள் )
எம்மை இகழாதே
. முற்கூறிய
பொருள்கள்
ஏனையோரால்
அழிப்பதற்கு
முடியாதவை .
679 அண்ணலு நூலும் பொருளு நிகழ்வு மிவையெஒL
மெண்ணினு மேனை பெழத்தினு மிக்கிருந்தவர் முன்
கண்ணினு மன்றிக் கருத்தினும் வேறெனக்
காட்டலும்பண்ணலங்
கொண்ட
சொல்லானவை
பேர்த்தும் பகர்ந்தனளாய் வற்றின் படு பாலவைதாம்
பூரணன்
இவ்விதமாகத்
தமது இறைவன் , தமது
நூல, அவை
கூறும்
பொருள் , அவற்றின்
நிகழ்ச்சி , இவை
பற்றிக்
கூறியதும் ), இனி
மையான
சொற்களையுடையவளாகிய
நீலகேசி , காண்டலளவை
பால்
மட்டுமன்றிக்
கருதலளவையாலும்
அவை வேறுபட்டவை
சான்பதைக்
காட்டுவதற்காக
அவற்றை
மீண்டும்
ஒருமுறை கூறி
னாள்
.
580 முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனர் சீவன்க டம்மொ
டெல்லா
மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்
பெற்ற வகையென்னை பேதா யதனைப்
பெயர்த்தனவே .
(உன்னுடைய
தலைவன் )
முற்றும்
தெரிந்தும் , ஒன்றுமே
பேசா
திருப்பானேயாகில்
, அவன்
எல்லா
உயிர்கள்
மேலும் கோபம்
உடை
யவனாவான்
. ( முற்று
முணர்ந்தவர்கள்
எல்லாருமே
பேசாது
விட்டுவிட்டால்
பேசுபவர்கள்
குற்றமுடையவர்கள்
. அவர்கள்
முற்
முணர்ந்தவர்களல்ல
என்பது
பொருளாகின்றது
. ) குற்றம் உடை
யோர்
உரைப்பதை
ஆகமமாகக்
கொள்ள
முடியாது . எனவே
நீ
உன்
தலைவனின்
நூலை
எவ்வகையில்
பெற்றாய் ? அதைக்
கூறு
என்றாள்
.
681 ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்
மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்
தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை
யிக்கலி யாள ருரைத்தவு மேதமெனாய்பிறவோ .
( நீலகேசியே
தொடர்ந்து
பேசுகிறாள் . )
நீ ஒக்கலி
ஓகலி என்ற
தெய்வங்கள்
உங்கள் சமய
ஆகமங்களை
உரைத்தன என்று
கூறி
னால்
, அத்தெய்வங்கள்
மற்கலியாரைப்
போல
முற்றிலும்
அறிந்தவர்களாயின்
, வாயைத்
திறந்து
பேசமாட்டார்கள்
( அல்லவோ ? )
அறியா
தவர்கள்
கூறும்
தத்துவம்
தகுதியில்லாதது
. ( அவ்விதம்
தகுதியில்லா
தவர்கள்
கூறுகின்ற
தத்துவத்தை
நீ ஏற்பின் ) , இக்கலியுகத்திலுள்
ளவர்கள்
கூறுகின்றனவற்றையும்
குற்றமுள்ளன
என நீ கொள்ள
மாட்டாய்
( போலும் ) .
682 அறிந்தா னறிந்தன தான்சொல்லி னார்வ .
சினத்தனனா
யெறிந்தா னனையதோ ரேதத்தை பொதுமங்
வேதத்தினான்
மறிந்தா னகன்றடு மாற்றத் தகத்தெனின்
மாண்புணர்ந்தாய்
செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற் றாத்தலன
பாகிற்றியே ,
மெய்ப்
பொருளை
அறிந்தவர்கள்
, தாம்
அறிந்தவரைச்
சொன்
னால்
( தான்
சொல்வதை ; னயோர்
ஏற்கவேண்டும்
என்று )
ஆர்வத்தால்
எழும்
கோபத்திற்குட்பட்டு
, உயிர்களை
வாளால்
வெட்டிய
ஒருவன்
பெறும்
குற்றத்தை
அடைவர் .
அக்குற்றத்தின்
காரணமாக
ஒருவன்
இவ்வுலகத்தில்
மீண்டும்
பிறப்பான்
என்று நீ
கூறினாயா
னால்
, அந்த
மாட்சிமையை
உணர்ந்த
நீயும் , வாய்
பேசாதிருந்தால்
ஒரு
சிறு தலைவன் (
மதத் தலைவன் )
ஆகிவிடுவாயல்லவா
?
ஆனால்
இன்று
நீலகேசியிற்
கிடைக்கும்
ஆசிவகவாதச்
சருக்கப்
பகுதியில்
, ஒக்கலி , ஓகலி
பற்றிக்
கூறியது
போலவும் , அதைக்
கேட்டு
நீலகேசி
பதிலளிப்பது
போலவும் உரைக்கப்படுகின்றது
.
இவ்விதம்
முன்
தொடர்பில்லாது
நீலகேசியின்
பதில்கள் அமை
வது
இரண்டு
தன்மைகளைச்
சுட்டுகின்றது
. ஒன்று
இன்றைய
நிலையில்
காணப்படும்
ஆசீவகவாதச்
சருக்கத்தில்
சிலபாடல்கள்
விடுபட்டுப்
போயிருக்கலாம்
. இரண்டு ,
இவ்வித
தங்களைத்
தம் நூலில்
எழுதும்
ஆசிரியர்கள் முன்னர்
ஒருவர்
கூறியது
போல எண்ணிக்
கொண்டு ,
அதற்கு
நூலில் வரும்
பாத்
திரத்தைப்
பதில்
கூறவைப்பது .
இவ்விதம் வினாக்களை
ஊகித்
துக்
கொண்டு பதிலை
எழுதிச்
செல்லும்
பான்மை
அக்கால
இலக்கிய
வெளிப்
பாட்டு நுண்
திறன்களில்
ஒரு
வகைப்பாடா
கலாம்
.
653 ஆத்த னறிந்தன யாவையுஞ் சொல்லல
னாய்விடினிச்
சாத்தனும்
யானு
மவன்றனிற் சால
விசையுடைய
நாத்தனை
யாட்டியோர்
நன்மைகண் டாலு
நினக் குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்கு மேதமி லம்பிறவோ.
அந்த
(உங்கள் )
தலைவன் (
மற்கலி )
தனக்குத்
தெரிந்தவற்றை
யெல்லாம்
கூறாது
விடுவானாகில்
, ( இங்கே
உள்ள ) இந்தச்
சாத்த
னும்
, நானும்
அவனை விட
மிகவும்
உயர்ந்தவர்கள்
. (ஏனெனில்
நாம்
, உலகில்
) காணும்
நன்மைகளையெல்லாம்
நாவினை
அசைத்து
உனக்குக்
கூறுகின்றோம்
. ( இன்னும்
நாம் பிறருக்கும்
) கொடுத்து
( நாமும்
) உண்கின்றோம்
. இம்மைக்கும்
மறுமைக்கும்
குற்றம் செய்
யாதிருக்கின்றோம்
அல்லவா ?
384 வானிடு வில்லின் வரவறி பாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடு சுட ரான்கதிர் வீழ்புயன்
மேற்மானடைந்
தாற்றனு
வாமிது
வாமதன்
றத்துவமே .
நி
உனது தலைவன்
வானவிற்
போன்று
தோன்றியவகை தெரி
பாதவன்
எனக்
கூறுகின்றாய்
. அவன் ( ஐம் )
பொறிகளும் , உடம்பும்
உடையவன்
ஆதலால் (
அவனும் )
பிறப்புடையவனே
. ( அதாவது
ஜாதகனார்
) . ( மேலும் ) , அதனுடைய
( -- அதாவது
வானவில்லின்
தோற்றம்
பற்றிய )
உண்மை
யென்னவெனில் , விண்மீன்களுடன்
சேர்ந்துலாவும்
சூரியனின்
ஒளிக்கதிர்கள்
முகிலின்
மீது
விழும்போது
வான
வில்
உண்டாகின்றது
.
585 முற்ற வறிந்தனன் யானென்று மோனங்கொண்
டேயிருந்தானற்ற மகலவென் றானீ யறிந்தமை யாதினினாம்
பெற்ற வகையெனப் பேசின்மை யாலெனிற்
பிள்ளைகளும் மற்றிம் மரமு மலையுமம் மாண்பின வாம்பிறவோ .
(உன்
தலைவன் ) “
எல்லாம்
தெரிந்தவன்
நானென்றும் , குற்றம்
ஏற்படா
திருப்பதற்காக
வாய்
பேசாதிருந்தான்
என்றும் ” , கொண்
டால்
( அவனுடைய
கொள்கைகளை )
எவ்விதம்
அறிந்தாய் ?
" அவன்
பேசாதிருந்ததனால்
நான்
உணர்ந்து கொண்டேன்
என்று
( நீ )
கூறினால் , ( பேசாதிருக்கின்ற
) குழந்தைகள் , மற்றும்
மரம் , மலை
எல்லாம்
( கூட )
முற்றுமுணர்ந்த
தன்மையுடையவர்கள்
அல்லவா ?
686 முடக்கு மெனினு நிமிர்க்கு மெனினுந்தன் மூக்குயிர்த்து
நடக்கு மெனினு மிருக்கு மெனினுந்த னல்லுறுப்பி
னடக்கு மியல்பல்ல னன்னவற் றார்வத்த னாகுமன்றி
யுடக்கு மிவையில்லை யேலுயிர் தானுண்மை யொட்டுவனோ.
உன்
தலைவன் , “ முடக்குதல்
, நிமிர்தல்
, மூச்சுவிடுதல்
, நடத்தல்
,
இருத்தல்
முதலிய ( செயல்களையும்
) செய்வான் ”
என்றால் , அவன்
தன்னுடைய
நல்ல
உறுப்புக்களை
அடக்கும் வல்லமையுடையவன்
அல்லன்
. . ( இன்னும்
அவன் )
அச்செயல்களைச்
செய்வதற்கு
விருப்புடையவனாகவே
கொள்ளப்படுவான்
. அன்றியும் , இவை
யெல்லாம்
அவனிடத்தில்
இல்லை
என்றால் , அவனுக்கு
உயிர்
உண்டு
என்பதை நான்
ஏற்றுக்
கொள்ளமாட்டேன்
.
687 நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலுங் காற்றின்
புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலுஞ்
சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு
மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை
யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை .
இவன்
( பூரணன் )
நிலத்தின்
பால் , நீரின்பால்
, காற்றின்
கண்
தெரியும்படியாக
உள்ள பால் , நெடிய
உயிரின்
போக்கு
இல்லாத
பால்
, என்று
சொல்லத்
தகாதவைகள்
எல்லாம்
சொல்லுவதால் ,
இந்த
ஆசீவகனைத்
துன்புறுத்தாது
விடமாட்டேன் .
பக்கத்தில்
உள்ளவர்கள்
அறியும்படியாக
இந்த
ஆசீவகனைத்துன்புறுத்தாது
விடமாட்டேன்
688 வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலா
நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவா கிக்
கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா
யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்
எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும் .
வண்ணம்
முதலானவற்றை (
நிறம் , மணம்
, சுவை
, தொடுதல்
)
வகுத்தால்
அவை
நிலத்திற்குரிய
பால்களாகும் . ( அப்படியாயின்
)
ஏனைய
அணுக்களுக்குமுரிய
பால்கள்
வேறாக இருக்கவேண்டும்
.
அவை
கண்ணுக்குப்
புலப்படாதும்
இருக்க வேண்டும்
: ( அத்து
டடன்
) வேறெந்த
வெகையாலும்
இவை
பெறமுடியாதிருக்க
வேண்டும் .
689 நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்
பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீ பெருக்கி
யோர்ப்பியாதுஞ் செய்யா துரைத்தா யரைத்
தபையிற் கூர்ப்பியாது மின்றி நின் கோளழியு மன்றே
கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே .
நீ
, நீர்ப்பால்
, தீப்பால்
, நில்லாத
காற்றின்
பால் எனப்
பெயர்களைக்
கொண்டு
( மேலும் ) வேறு
வேறாகப்
பெருக்குகின்றாய்
.
( அவை
பற்றி ) எந்த
எண்ணமும்
கொள்ளாது
உரைக்கின்றாய்
இவ்விதம்
உரைக்கின்றமையால்
, உண்மையெதுவுமின்றி
கோட்பாடு
அழிந்து
விடும் . நீ
கொண்டு வந்து
( நிலை
நாட்டும் )
ஐந்து
பொருட்கள்
என்ற கொள்கையும்
( கூட ) அழ்ந்து
விடும்.
690 பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா
யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ
விருடாமி வைந்தினுளு மெக்கூற்று மில்லே
லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ
அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ ,
பொருள்
ஐந்து (என்று
கூறுகின்றாய்
) . இந்த ஐந்தனுள்
இருள்
எந்தக்
கூற்றினுள்
அடங்கும் ? அறிவு
வழி இதற்கு
விடையளிப்
பாயாக
! “ இருள் இந்த
ஐந்தனுள்
எந்தக்
கூற்றினுள்ளும்
அடங்
காது
என்று கூறின் , நீ
இப்போது
அருள் நிலை
குன்றியிருக்கின்
றாயே
, எது
எந்தப் பாலினைச்
சார்ந்தது ? அணுக்களாலான
கந்
தங்கள்
எண்ணற்றவையல்லவா
?
691 பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்
கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா
லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்
சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்
சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய் .
( மேலும்
) நீ
சொல்கின்ற
பால்கள்
எல்லாம்
தம்முள் ( ஒன்றுள்
ஒன்று
)
கலவாதிருந்து
கொண்டே , அப்
பொருள்
களாகின்றன
என்ற
தன்மையை நோக்கும்போது அது ஒற்றுமையும் வேற்றுமையும்
ஆகாதோ
! பொய் வாதம்
புரிகின்ற நீ
சிறிதும் வெட்கப்பட
மாட்
டாய் ! அடக்கமுடைமையால் ( நீ ) வெட்கப்படமாட்டாய் ( போலும் ) .
692 பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே
வேறாது மில்லை யெனவே விளம்புவாய்
நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா
நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும்
நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும் .
பால்கள்
பலவகையாகி , அப்பொருளுடன்
கூடும் போது , அவை
அப்பொருளாகவே
ஆகின்றன ; ( அவை
)
வேறுபடுவதில்லை
என்
கின்றாய்
.
அப்படியானால்
ஒன்றாகிவிட்ட
நிலப்பாலை
மீண்டும்
பெறமுடியாது
. எனவே , நாலாகி
( நான்கு
பால்களாக )
நிற்கின்ற
வகையை
எனக்கு நன்கு
எடுத்துக்
கூற வேண்டும்
. அதைக்
கூறாது
. தோற்று
விட்டாயானால்
மீதிப் பொருள்கள்
பற்றிய கொள்
கையை
நிலை நாட்ட
வேண்டும் !
693 இன்றேய தாயினிவைபா லிவைபொருள்க
ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்
குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ
வன்றோவ தன்றாலஃ தியாப்பாதல் வேண்டும்
அவையவையே சொன்னாலஃ தியாப்பாதல்
வேண்டும் .
வெவ்வேறு
தன்மையுடைய
அணுக்கள்
ஒருங்கு சேரும்
.
ஆனால்
ஒன்றனுள்
ஒன்று
நுழைந்து
ஒன்றாகக் கலக்கமாட்டா
என்று
ஆசீவகர்கள்
கூறும்
கூற்றின் படி
பார்த்தால் , எவ்விதம்
ஒன் றனுடன்
ஒன்றுகலக்காமல்
ஒரே
தன்மைத்தான
பொருள்
உண்டாகலாம்
என்ற
கேள்வி
நீலகேசிக்கு
உண்டாகியுள்ளது
.
எனவே
அதை
ஒற்றுமையும்
வேற்றுமையும்
உடையதெனக்
கொள்கிறாள் .
அப்படியில்லையென்றால்
,
பொருளும்
பாலும்
ஒன்றே
என்று
கூறுவாயானால்
, இவை
பால் இவை
பொருள்
என்று
பல படப்
பிரித்துக்
கூறுவது
எத்தகையது ? மலை
, குவடு
,
அடுக்கல்
என்பவை
குன்றிற்குப்
பாலாகச் சொல்ல
முடியுமா ?
( முடியாது
) . அது
முடியாது
என்றால்
அதுவே ( முதற்
கூறிய
பொருளும்
பாலும்
ஒன்றேயென்ற)
உன் கொள்கைக்கும்
விதியாக
வேண்டும்
. பொருளும்
பாலும்
ஒன்றென் றால்
அது ( மலை, குவடு
.
அடுக்கல்
ஆகிய )
இவற்றிற்கும்
விதியாக
வேண்டும் ,
694 நோயில்லை வாழி கடவுளெனவுரைத்தா
னாயுநோ யின்மையினேர்த் தாய வழியொருநாட்
உயினும் வெய் :பநோய் சேர்தலையுங் காண்டு நீ
சாயினுந் தத்துவத்தைச் சாராதாயன்றோ
தடுமாற்றக்
காழ்ப்பாடுந்
தானுளதே
யன்றோ .
ஒருவன்
, ஒரு
தடவை
நோயில்லை
என்று கூறி , நோயில்லாது
வாழ்ந்து
கொண்டிருந்த
போது ஒருநாள் , நெருப்பிலும்
கொடிய
நோய்
அவனைச்
சேர்கின்றது
என்பதைக்
கண்டு , நீ
( உனது
கொள்கை
)
தகர்ந்தாலும்
, உண்மையை
அறியமாட்டாய்
( அதாவது
பொருள்கள்
மாறுபடாது
என்று
கூறினாய் .
ஆனால்
ஒருவனுக்கு
வரும்
நோயிலிருந்து
பொருள்கள்
மாறலாம் என்ற
கொள்கையும்
பெறப்படுவதால்
பூரணன்
கொள்கை
பயனற்றுப்போய்
விடுகின்றது )
.
மேலும்
, உழன்று
நிற்றல் , தாழ்தல்
, மிதத்தல்
ஆகியவைகளும்
இருக்
கின்றன
அல்லவா ? ( இங்கும்
பொருள்கள்
மாறுபடுவது
உணர்த்தப்
படுகின்றது
.)
695 கடுங்கதிரோன் மீதாறக் காணாக்கோ ளெல்லாம்
படும்பொழுது பினுந் தம்பயனே செய்யு
நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா
மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டு
முதவாத வார்தலையு மொட்டலே வேண்டும் .
ஞாயிற்றின்
ஒளி
மேலோங்கும்
போது நமது
கண்ணுக்கும்
புலப்
படாத
கோள்கள் எல்லாம்
, அச்சூரியன்
மறைகின்ற
காலத்திலும் ,
உதிக்கின்ற
காலத்திலும் , அவற்றின்
தொழில்களைச்
செய்து நிற்ற
லைக்
காண்கின்றோம்
அல்லவா ? ( அப்படியாயின்
) நீண்டகால
மாகப்
பல்வேறு
பிறப்புக்களையும்
எடுத்து அப்பிறப்புகளின்
செய்த
செயல்களெல்லாம்
மறைந்து
போகாது (
இப்பிறப்பிலும்
) உலவி ,
உண்டு
சுழன்று
கொண்டிருத்தல்
வேண்டும் . இப்பிறப்பிலும்
அதே
போல்
முற்பிறப்பில்
அழுக்குகளை
உண்ணும் பிறப்பெடுத்திருந்தால்
தேவையற்ற
அழுக்குகளையும்
ஏற்றுக்
கொண்டேயாக
வேண்டுமல்
லவா
( மேலும்
தொடர்ந்து
நீலகேசி
உரைக்கின்றாள்
) .
696. எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்
றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்
துப்பாய தூச்சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென்
றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ
விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ .
இங்கு
பொருள்களின்
இயல்பு
மாறுவதில்லை
எனப்
பூரணன்
முன்பு
கூறியிருக்க
வேண்டும் , எனவே
அதை
எதிர்க்கும்
நீலகேசி
, ஒவ்வொரு
பிறப்பிலும்
இயல்பு
மாறாதென்றால்
, வராகப்
பிறப்பில்
செய்த
மலமுண்ணுதல்
போன்ற வேண்டாத
செயல்களைப்
பின்னரும்
இன்னொரு
பிறப்பான
மானிடப் பிறப்பில்
செய்ய வேண்
டுமல்லவா
? எனக்
கேட்கிறாள் .
இதையே
சமயதிவாகரர்
தன்
உரையில்“
அனாதி
வரலாற்றதாகிய
ஸம்சாரம் கெடாது
மறைந்து
நின்றதாயின்
ஒரு காலம்
மனுஷ்யனான
பொழுது பூர்வ
முளவாகிய
ஜனனகாரியங்களெல்லாம்
காண்டல்
வேண்டும் ; வேண்டவே
, முன்
னொருகால்
வராகமாகியும்
ஜனித்தானன்றோ
? தத்ஜனன
காரியமா
கிய
மலபக்ஷணாதியு
மிசைத்தல்
வேண்டுமென்றவாறு
" எனக் கூறு
கிறார்
.
உள்ளன
ஒரு போதும்
கெடாது .
இல்லாதவை
புதிதாகத்
தோன்றமாட்டா
” என்று இவன்
ஒப்புதல்
இல்லாத (உரைகளை
)
வற்றை
எடுத்துக்
கூறுவானாயின்
, இவன்
உண்கின்ற
உணவாகிய
தூய
சோற்றின்
கண்ணே , தூய்மையில்லா
தனவும் ,அமிழ்ந்தியி
ருக்கின்றன
. இவ்விதம்
இப்பாவி
கூறுகின்ற இழிவு
தரத்தக்க
செயலும்
என்னவோ !
இந்தப் பாவச்
செயலுடையோன் செய்கின்ற
இழிவான
செயலும்
என்னவோ !
697. நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக
வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்
கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்
தன்றிகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ
தவத்தினுமில் வாழ்க்கை தான்கண்ட தென்னோ
இவன்
நின்று
கொடுங்கள் , உண்டு
கொடுங்கள் , தின்று
கொடுங்கள்
என்று இவை
எல்லாவற்றையும்
( கூறினானே
யொழிய )
அறம்
செய்வோர்க்குப்
புண்ணியம்உண்டாகும்
என்று
கூறவில்லை 19
கொன்று
அறம் செய்தல்
தீய செய்கை
என்றும் , கொல்வதால்
பாவ
மில்லையென்றும்
, தனது
தீமையை உணராத
இவன் கண்டது
என்னவோ
! தவ
ஒழுக்கத்தில்
நின்று
கொண்டே இல்வாழ்க்கையை
கடைப்
பிடிப்பதும்
என்னவோ!.
698. இல்லாது தோன்றா கெடாவுள் ளனவென்பாய்
சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்
கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா
லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே
யிழிவுயர்ச்சிக் காரணமுமில்லாதா யன்றே .
இல்லாதது
தோன்றாது .
உள்ளது
கெடாது என்று
நீ சொல்
கின்றாய்
. ( அப்படிக்
கூறுகின்ற )
உன்னை , நெய்
( அதனிடத்தே
முன்பு
இல்லாத )
நெருப்பாக ஆகிச்
சுடுவது
எப்படி என்று
கேட்கின்ற
எனக்கு
(
விடை சொல்ல
மாட்டாது )
மனங்கலங்கி , ஐயம்
கொண்டு
, ஆழ்தல்
மிதத்தல்
பற்றிக் கூறுகின்றாய்
. ( உன் கொள்
கைப்படி
) பொருள்கள்
எல்லாம்
ஒன்றனுள்
ஒன்று
அடங்கமாட்
டாது அல்லவா ?
( அத்துடன்
பொருள்களின் )
கீழ்
நோக்கிச்
செல்லுதல்
, ( மேனோக்கி
) உயர்தல்
ஆகியவற்றிற்கு
உன்னால்
காரணம்
சொல்ல
முடியாதல்லவா?.
699 ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை
யூட்டும் பொழுதொடுதான் புல்லுண்ணும்
போழ்தின்கானாட்டியவீதி யதிசயத்தை நீ யெமக்குக்
காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்
கடவுள் குழாத்தார்தங் காழ்ப்பெலாங் கோடும் .
குதிரையின்
ஓட்டமும்
குதிரையும்
ஒரே பொருள்
என்று நீ கூறி
னால்
, குதிரைக்கு
உணவு ஊட்டும்
போதும் அது
புல்லை உண்
ணும்
போதும் , அதனுடைய
பல்வேறு
வகைப்பட்ட
நடைகளையும்
நீ
எமக்குக்
காட்டுவாயானால்
, உன்னுடைய
கொள்கைகளை
நாம்
ஏற்றுக்
கொள்வோம் .
உன்னுடைய
கடவுட் கூட்டத்தினர்
கூறு
கின்ற
ஆழ்தல்
முதலியவற்றையும்
(அதாவது ஆழ்தல்
மிதத்தல் )
என்ற
கொள்கையினையும்
) நாம்
ஏற்றுக்
கொள்வோம் .
700 வண்ண முதலா வுடையகுண மெல்லாம்
எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்
கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந்
திண்ணி தாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்
திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும் .
( அடுத்து
) நிறம்
முதலிய
பண்புகளைக்
குறித்து
நாம் எண்ணு
வோமாயின்
, அப்பண்புகளும்
பொருளும்
ஒன்றே (
என்கின்றாய் )
. -
அப்படியானால்
ஈச்சமரத்தின்
பிஞ்சுக்காய்களில்
நாம் கண்ட ,
பசுமை
நிறத்தை அது
கனியான போதும்
தெளிவாகக்
காட்டுவாயா
னால்
, நீ
தெளிந்த
அறிவுடையவன்
எனக் (
கூறுவோம் ) . (இன்னும்
)
மாறி
மறைந்த
குணங்களை
அப்போதுள்ள
குணத்துடன்
அதே
நேரத்திற்
காட்டினால்
நீ தேவனே என (
நாம் கூறுவோம்
) .
701. வட்ட முதலா வுடைய பொருளெல்லா
மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே
றில்லென்பாய்
தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்
விட்ட வடிவு விரித்துநீ காட்டாய் .
விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய் .
வட்ட
முதலிய
வடிவங்களையுடைய
பொருள்களையெல்லாம்
ஒத்துக்
கொள்கின்ற நீ
அந்தப்பொருளே
அந்த வடிவங்கள்
என்றும்
அவை
வேறு
வேறானவையல்ல
என்றும்
கூறுகின்றாய்
. அப்படியா
யின்
ஒரு தட்டத்தை
அழித்து (
அதையே )
ஓடமாகச் செய்தால்
,
அந்த
ஓடத்திலும் (
நீ தெளிவுறக்
அதைக்
காட்டவில்லை .
மாறுதலடைந்த
பொருள்களின்
மாற்றங்க
ளையும்
நீ
காட்டவில்லை .
702. மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவன்யா
னென்னிற்
பதப்பொருடா னான்கின் பன்மை முடித்தாயா
மிதப்பனவே யாழ்வன தாம் வேறியாது மில்லே
லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா
லுடனே நின் பக்க முடைத்திட்டாய் கண்டாய் .
நான்
மிதக்கின்ற
பொருள்
களையும்
ஆழ்கின்ற பொருள்களை
யும்
பாகுபாடு
செய்வேன்
என்று நீ
கூறினால் , பதார்த்தப்பொருள்
களுக்கு
நான்கு
தன்மைகளான
பலவாகி
நிற்கின்ற
தன்
மையை
( அதாவது
பொருள் , அது
உள்ள இடம் , அந்தக்காலம்
,
அதன்
இயல்பான
பண்பு
என்பவற்றை )
நீ ஏற்றுக் கொள்ளவில்லை
.
மிதக்கின்றனவே
( அதாவது
பொருள்களே )
ஆழ்கின்றனவுமாம்
,
அவை
வேறு
வேறானவையல்ல
என்று நீ
அழுத்தமாகக்
கூறினும்
நீ
கூறிய
சொற்கள் உதவா
திருப்பதையே
நீ காண்பாய்
!உன் கொள்
கையை
நீயே
தகர்த்து
விட்டவனாகின்றாய்
.
703. தொழிற்சொற் குணச்சொல் வடிவுச் சொன்
மூன்றும்
பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு
மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி
யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு
மிலக்கண நின்சொ லியையலவே காண்டாய் .
பொருள்கள்
மிதக்கின்ற
பொருள்கள் , ஆழ்கின்ற
பொருள்கள்
எனப்
பாகுபாடு
பண்ணினாலும் .
அவை அவ்விதம்
கொள்ளப்படமுடியாது
என நீலகேசி
கூறுகின்றாள்
. ஏனெனில் ,
பொருள்கள்
அவற்றிற்குள்ள
நான்கு
தன்மையால் வேறு
வேறா
னவை
என்று அவள்
வாதாடுகின்றாள்
. அவை இருக்கின்ற
இடத்
தில்
அவை உள்ள
காலத்தால் , அவைதரும்
பயனால் ,
அவை
கொண்ட
வடிவத்தால்
என நான்கு
விதத்தால்
வேறுபடுகின்றன
.
எடுகோளாகத்
தட்டத்தையும்
ஓடத்தையும்
எடுத்துக்
கொண்டால்
தட்டம்
தரையிலும்
ஓடம்
நீரிலும்
தான் இருக்க
வேண்டும் .
எனவே
அவை
இருக்கின்ற
இடத்தால்
வேறுபடுகின்றன
. இன்று உள்ள
தட்டமும்
நாளை கொண்டு
வரப்படுகின்ற
ஓடமும்
ஒன்றல்ல .
எனவே
காலத்தால்
வேறுபடுகின்றன
. தட்டம் பொருள்களை
வைப்
பதற்குப்
பயன்படுகின்றது
. ஓடம்
நீரினைக் கடந்து
செல்லுதல்
போன்றவற்றிற்கு
உதவுகின்றது , எனவே
அவை பயனால்
வேறு
தொழிற்சொல்
(வினைச்சொல் )
பண்புச் சொல் , வடிவுச்
சொல்
என்ற
மூன்று
சொற்களையும்
பிரித்துப்
பார்க்கும்
போதும் ( அவை
பொருள்
) தவறில்லாத
சொற்களாகவே
காண்கின்றோம்
. பின்னர்
குற்றமற்ற
பொருளோடு
கூடிய போதும்
அவை எழுத்தியலிற்
கூறப்
பட்ட
சந்திவிதிகள்
சேர்கப்படும்
போது எக்காலத்திலும்
ஒரே மாதி
ரியாக
இருப்பதையும்
( நாம் )
காண்கின்றோம்
24. எனவே நீ
கூறு
வது
இலக்கணத்தோடு
பொருந்தாதிருப்பதைக்
காண்பாயாக .
704. அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதந் தனவா வுரைத்தல்
செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான் .
மேலும்
, ஒரு
பொருள்
உண்டாவதும் , அது
உண்டாகும்
வகை
யும்
, அது
உண்டாகும்
அளவும் , அது
உண்டாகும் காலமும்
என்று
நீ
நான்காகக்
கூறுவது தவறு
என , நான்
ஒரு
சிலவற்றைக்
காட்டிக்
கூறுகின்றேன்
.
( இக்கூற்றைத்
தொடர்ந்து
நீலகேசி , ஆசீவகனின்
கூற்றுக்கள்
தவறானவை
என்பதை
எடுகோள்களுடன்
விளச்குகின்றான்
) .
தட்டம்
வட்ட
வடிவிலும் , ஓடம்
நீண்டு
உள்கோலிய
வடிவிலும்
இருக்கும் .
எனவே அவை
வடிவால்
வேறுபடுகின்றன
.
இவ்வித
வேறுபாடுகள்
இருந்தபோதும்
ஆசீவகனான
பூரணன் ,
பொருள்கள்
ஆழ்தல் , மிதத்தல்
ஆகிய
பண்புகளால்
வேறுபடுகின்
றன
எனக்
கூறுவதால்
நீலகேசி அவன்
கொள்கை உதவாதவை
என
எடுத்துக்
கூறுகிறாள் .
705. அரிவை யவளாங் குழவி யவளை
யுரிய வகையா லுவந் தாங்கெடுத்தா
லரிய முழமூன் றளவாம் பொழுதும்
வரிசை யுரைத்த வருடம் மதன்பின் .
( மேலே
நீ கூறிய
நான்கு
நியதிகளை நீ
இவ்விதம் விளக்குகின்
றாய்
என நீலகேசி
பூரணனுக்குக்
கூறுகின்றாள்
) 35 . அரிவைப்
பரு
வத்தையுடைய
பெண் என்பது
குழந்தை
ஆகும்
நியதியாகும் .
( அதுவாம்
) அரிவைப்
பருவத்தளாகிய
அவளை உரிய முறையில்
வளர்த்தல்
என்பது அது
ஆகும்
வகையாகும் (
ஆமாங்கு ) . அது
மூன்று
முழமாக
வளர்தல்
என்பது அது
ஆகும் அளவு
(ஆந்துணை ) .
அப்
பெண்ணின்
வளர்ச்சிக்கு
வேண்டியதாக உரைக்கப்பட்ட
ஆண்டுகள்
ஆகும்
காலமாகும்
(ஆங்காலம் ) .
706. குழவித் திறமுந் துறவா ளவளும்
முழுவித் ததுவும் முளையா துளதா
மிழவெத் துணையு மியல்பேன் முடியா
தழிவித் திடுவேனயநீ விரையல் .
( ஓரு
பொருளுக்கு
அழிவுகிடையாது
என நீ கூறின்
அரிவை
நிலையை
அடைந்தபெண் )
குழந்தையாக
இருந்ததன்மையை
நீத்தி
ருக்கக்
கூடாது . (
அதுபோலவே )
முழுமையான
ஒரு விதையானது
முளைக்காதிருக்க
வேண்டும் . (
முளைத்தால்
அந்த
விதையும் அழி
யாது
மரத்துடன்
இருக்க
வேண்டுமல்லவா
? ) அவ்விதம்
நிகழாதபடி
யால்
, உன்
கொள்கையை
நான்
அழித்திடுவேன்
. நீவிரையாதே
!
707. முலையும் மகவும் முறுவல் லவையும்
தலையுண் மயிரும் முகிரும் முடனே
நிலையில் லமையு மிலதா மெனினே
யலையுந் நினகோ ளுடனே யெனலும் .
( அடுத்து, எதுவும்
புதிதாகத்
தோன்றாது என
ஆசீவகன் கூறு
வதற்கு
நீலகேசியின்
மறுப்பு :-) ( ஒரு
பெண் குழந்தைக்கு
, அவள்
அரிவையாகுங்
காலத்தே , ) மார்பகங்களும்
. வயிற்றில்
குழந்தையும் ,
பற்களும்
, தலையில்
மயிரும் , நகங்களும்
, நிலையாகவே
இருந்திருக்க
வேண்டும் . இல்லையென்றால் உனது கொள்கை வலுவற்றுப்போகும் .
708. உளவே யெனின்முன் னுரைத்தந் நியதங்
களவே யெனலாங் கடையா மென நீ
கிளவா தொழியாய் கிளந்த குழவிக்
களவே முழமா வவைதாம் பலவால் .
( மேற்கூறியவையெல்லாம்
) உண்டென நீ
கூறின் , முன்னர்
நீ
உரைத்த
(சதுவா )
நியதங்கள்
பொய்யெனப்படும்
. முன்பு நீ
கூறிய
குழந்தைக்கு
உயர்ச்சி
அளவு ஒரு
முழமேயாகும் .
பின்னர் அரி
வைப்
பருவத்திலுள்ளவளுக்கு
பல முழங்கள்
அளவாகும் .
இவ்வி
தம்
கூறுதல்
இழிவானதாகையால்
நீ இந்த முறைகளை
( சதுவா
நியதங்களைக்
) கூறாதே .
709. உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்
ணடையு
மவளுக் கவளவ்
வகையாற்
கடையில் குழவி யவைதன் னியல்பா
நடையு மதுவே னகையாம் பிறவோ .
அதேபோல் இன்னொரு பெண் வயிற்றிலிருக்க வேண்டும் .
அக்
குழந்தை
வயிற்றில்
இன்னொரு
குழந்தை , அவ்வி
தமே
பல
குழந்தைகள்
இருக்க
வேண்டுமெனக்
கூறி உள்
ளது
கெடாது
என்பதை
மறுக்கின்றாள்
. சமய திவாகர
முனிவர்
தன் உரையில்
விறகில்
நெருப்பிருக்கிறது
என
நீ
கூறுவாயானால்
அது தவறு .
அங்கு
நெருப்பில்லை
.
நெருப்பிருந்தால்
விறகே
எரிந்து
விடும் . நெருப்பை
எழ
வைக்கத்தக்க
ஆற்றல் தான்
உண்டு எனக்
கூறி விளங்க
வைக்கின்றாள்
.
710. இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்
நனிகா ரணமாய் நடுக்கு நின்கோட்
டனிகா ரியமும் முளதேற் றவறா
முனிலா மொருவன் பொழுதும் முடிவாம் .
( ஆகும்வகை
ஆகும் என்ற
ஆசீவகன் கொள்கைக்கு
மறுப்பு
:) இனி ஆகும்
வகை (
ஆமாங்காம் )
என்பதற்கு
மறுப்புக்
கூறு
என்று
கேட்பாய் .
ஆயின் , ஆகும்
வகை என்பதிற்
காரணத்
தால்
காரியம்
நிகழ்கிறது . (
நீ
காரியத்திற்கு
காரணம் இல்லை
எனக்
கூறுடாவனாகையால்
,) உனது
கொள்கை இங்கு
அசைக்கப்பட்டு
விடும்
.
( உன்
கொள்கைப்படி )
தனியாகக்
காரியம்
( என்று
நீ கூறின் ) , அது
தவறு ஆகும் . (
முன்பு
இல்லாத
அரிவைப்
பருவம்
தோன்றாது .
முன்பு
இருந்த
குழவிப் பருவம்
கெடாது . இத
னால்
உன்
கொள்கைப்படி
நீ இப்போது
கூறுவது தவறு
) . ஆங்
காலத்து
ஆம் என்ற உன்
கொள்கைப்படி
முன்பில்லாத
ஒரு காலப்
பொழுது
தோன்ற
முடியாது .
எனவே
அரிவையாக
அவள் ஆகும்
காலம்
இருக்க
முடியாது ) .
ஆனால் இங்கு
முன்பு
இல்லாத ஒரு
காலப்
பொழுது உண்டு
. ( இது
உன்னுடைய கொள்கைக்கு
ஏற்ற
தல்ல
) . எனவே
ஆங்காலத்து
ஆம்
என்பதன்படி
காலம் உனக்கு
உடன்பாடாகின்றது .
711. நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப
தயதி யெனினீ யமையுஞ் சலமேல்
வியதி யெனினு வெகுளல் விழுதை
பயதி யெனினு நினக்கோர் பயனே .
பேதாய்
, ( பொருள்கள்
எப்போதும் )
மாறுதலின்றி
இருக்கின்றன
( என்று
கூறும் நீயே ) , ( பொருள்கள்
இவ்வித )
நியதியால்
ஆகின்றன
என்று
கூறுவது
வேடிக்யைாகக்
கூறுவதானால் பொருந்தும்
.
( அதுவே
) பொய்யானால்
அது உனக்குக்
) கேடு என நான்
உரைத்
தால்
, நீ
கோபப்படாதே ! (
அவனுக்கு )
இதுவே (
பிறப்பிலிருந்து
உண்டான
இயல்பாய
குணம் என
ஏனையோர்
கூறின் , உனக்கு
அதனால்
வரும் பயன்
என்ன ? (உயிர்கள்
).
712. பாலைப் பழத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடு
கண்ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகை
யுயர்ந்து ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டு
கின்றாய் .
மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ
( நீ )
நல்ல
உயிர்கள் , பாலைப்
பழத்தின்
நிறத்தினை
உடையன
வாகப்
, பல
பக்கங்களிலும்
, எல்லா
வகையாலும்
அகன்று , ஐந்நூறு
காதம்
உயர்ந்து
இவ்வுலகில்
இருக்கின்றன
என
நிறுவுகின்றாய்
.
உனக்கு
இவ்வளவு
மயக்கமுண்டா .
நீ பெரிதும் மயக்கம்
கொண்டி
ருக்கின்றாயா
?
713. ஒன்றினு ளொன்று புகலில் வென்ற வுயிர்
களெல்லா
நின்றன தந்த மகலமு நீளமும் பெற்றனவாய்
நன்று நீ சொல்லுதி நாந்தொக் கிருந்துழி நல்லுயிர்க
டுன்றின வென்பது சொல்லா தினியென்ன
சொல்லுதியோ .
உயிர்கள்
ஒன்றனுக்குள்
ஒன்று
புகமாட்டா என்று
கூறுகின்ற நீ
அதே
உயிர்கள்
தத்தமக்குரிய
அகலம் நீளம்
ஆகியன உடை
யனவாகி
நிற்கின்றன எனக்கூறுகின்றாய்
, நாம்
தொகுதியாக
இருப்பது
போல் நல்ல
உயிர்களும்
இருந்தன என்று
வேறென்ன கூறுவாயோ .
714. தானுள தாய வழியவன் றன்பா லியல்பெனலா
மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்
வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை
நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டு
கிற்பார் .
ஒரு
பொருள்
இருக்கின்ற
இடத்தில்
அதன் குணமும்
கூடி
இருப்பது
இயல்பு
எனலாம் .
உடம்பை
உடையதாக இருக்கின்ற
( அதாவது
உடம்புடன்
கூடி
இருக்கின்ற )
உயிர் அது
இருக்கின்ற
இட
அளவை
உணர்த்தியிருப்பது
போல் 33 , இந்த
உடம்பைவிட்டு
வானில்
உயர்ந்து
சென்ற போது , தனது
குணமாகிய
அறிவுடன்
சேர்ந்திருக்க
வேண்டும் .
அப்படி
இல்லையெனில்
நான் அது
இருப்
பதாகக்
கூற மாட்டேன்
. அதை யாரால்
உண்டென்று நிலைநாட்ட
முடியும்
!
715. ஒன்றென நின்ற வுயிர்தா னுருவித னாதலினாற்
பொன்றுந் துணையும்பல் போழெய்தும் பூசணிக்
காயினைப்போ
லின்றெனினாகம மாறதுவா மினி யவ்விரண்டு
மின்றெனிற் சால வெளிதாம் பிறவத னின்மையுமே
( நீ )
ஒன்றென்று
கூறுகின்ற
உயிர் , (உடம்பாகிய
) உருவம்
உடையது
ஆதலினால் , இறக்கும்
வரை , பூசணிக்
காயைப்போல்
பலதுண்டுகளாக
வெட்டத்தக்கதாகும்
. அப்படியில்லையானால்
,,
அது
உன்
கோட்பாட்டிற்கு
மாறானதாகும் .
இனி , இரண்டு
தன்
மைகளும்
இல்லையெனில் , ( அதாவது
உயிர் உடம்பு
உடையது
மில்லை
, உடம்பு
இல்லாததுமில்லை
) , அத்தகைய
உயிர் இல்லை
யென்று சொல்வது மிக எளிதாகும் .
716. எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறு
சொல்லி
மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்
தினையேற்
கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவு
யிர்க்கெண்
ணுண்டெனி னில்லை யகன்றடு மாற்ற முலப்பின்
மைபோல் .
உயிர்களுக்கு
எண்ணிக்கை
யைக் கொடுத்து
, ( அவற்றிற்குரிய
)
இடத்தின்
வகைகள் , ( அவற்றின்
) உட்பொருள் , ( அவற்றின்
) முடிவு
ஆகியவை
கூறி , அவற்றை
மண்டலமோட்சத்தின்
மூலம்
மீண்டும்
( உலகத்திற்குக்
) கொண்டுவரும்
எண்ணக் கோட்பாடுடையவன்
நீ
யாகில்
, நீ
உண்மையை
அறிந்து
கொள்ளவில்லை (
யெனத்தெரி
கிறது
) . உலகத்தில்
ஆழ்தல் , மிதத்தல்
ஆகியன கொண்டு
நிற்கின்ற
நிறையுள்ள
உயிர்களுக்கு
எண்ணிக்கை
உண்டாயின் , அவை
கட்கு
அழிவு
இல்லாதது
போல் , பரந்து
பட்ட பிறப்பு
இறப்புகளும்
( கூட )
இல்லை .
717. மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்
பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா
மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்குசீர்கீ
ழாற்சீ ரவிழும் மவை யென்னினு மாவ தென்னோ ,
உயிரும்
காற்றும்
மேலே போகும்
இயல்புடையன , காற்று
குறுக்
காகப்
போகும்
இயல்புடையது
பால் என்பதே
சீர் (
என்பதாகும் ) .
நீரும்
நிலமும்
பணிந்துள்ள
இயல்புடையது (
அதாவது
கீழ்நோக்கி
யுள்ள
தன்மையுடையது
) . மேலே போகும்
இயல்புடையவை
மேலே
போகும் .
குறுக்காகப்
போகும்
இயல்புடையவை
குறுக்கா
கப்
போகும் , கீழ்
நோக்கி
விழும்
இயல்புடையன
கீழே விழும்
என்று
நீ
( பலவாகக்
கூறினாலும் )
அவற்றால்
வரும் பயன்
என்ன ?
718. தீயு முயிருந் தமக்காய திசையினாலே
போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்
வீயும் வகையும் வினையாகுந் திறமு மெல்லா
நீயு மவற்றை நினையாயுள வாக வன்றோ .
தீயும்
உயிரும் மேல்
நோக்கிச்
செல்லும் இயல்புடையவைகள்
என்றால்
அவை இங்கு (
இந்த உலகில் ) (
மீந்து ) இருத்தல்
பொருத்த
மில்லாததாகும்
3. அவை
இறக்கின்ற
வகை , அவைதொழில்
ஆற்
றும்
வகை
போன்றவையெல்லாவற்றையும்
நீ நினைத்துப்
பார்ப்பாய்
அல்லவா
?
719. தென்றை துளையத் திசைதானுறப் போய
காற்றேற்
பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி
யஃதான்
முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா
வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்
றியோ .
மேலும்
( காற்று
குறுக்காகச்
செல்லும்
தன்மையுடையது
என்று
மாத்திரம்
கொண்டால் )
தெற்குப்
பக்கத்தில் ஒலியுறும்படி
( வடக்
குத்
) திசை
நோக்கிச்
சென்ற (
தென்றல் )
காற்று , மீண்டும்
பின்பு
ஒரு
நாள்
பெயர்ந்து
வராத
தன்மையுடையதாக
இருக்கவேண்டும்
.
முன்தைத்திங்களைத்
தழுவி
வருத்தத்தைக்
கொடுக்கும்
வாடைக்
காற்றும்
அப்படியேயாகும்
. ( அதாவது
மீண்டும்
வராததன்மையு
டையதாக
இருக்க
வேண்டும் .
திரும்பி
வருவதால் , விலங்கு
சீர்
மட்டுமன்றி
, வட்டச்சீர்
- வட்டமாய்
வீசுந்தன்மையும்
- உண்டு
என்பது
பெறப்படும் ) .
இன்று பகலே
இதனுடைய உண்மையை
நீ
எனக்கு
விளக்குவாயாக
.
720. முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று
பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந் தவத்தா
யென்சென்ற தெய்துந் திறந்தன்னையெனக்
குணர
நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே .
முன்
(
நிலத்தினின்றும்
ஆவியாச்
சென்ற நீர் ) முகில்
தன்னுள்
கொண்டுபின்
( மழைத் )
துளியாகக்
கீழ்நோக்கி வீழ்கின்றது
.
பெருந்தவத்தையுடையவனே
! கீழ் விழும்
அத்துளிகள்
எவ்விதம்
மேலே
செல்லும்
குணமுடையனவாயின
என்பதை உன்னுடைய
நெறியின்
படி
விளக்குவாயா ? உன்
நெறியைக்
கடைப்பிடிக்க
அது
உதவியாகும்
அல்லவா ?
721. பாலெங்கு மோதப் படுகின்ற பதப் பொருட்குக்
காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு
மென்றாற்
சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு
கின்றாய்
மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ .
பதப்
பொருள்களுக்குக்
குணம் ( பால் )
கூறுகின்றாய்
. ஆனால்
காலங்கள்
பற்றி நீ
எதுவும்
கூறவில்லை .
அதுதான் உனது
கொள்
கையானால்
, நீ
, ஒழுக்கங்களைக்
கடைப்பிடித்து
, அதனால்
வரும்
குணங்களைப்
பற்றிச்
சொல்லாதவனாகின்றாய்
. நீ பித்துப்
பிடித்தவனாக
இருக்கின்றாய்
. அதனைத்
தீர்ப்பதற்கு
மருந்தும்
உண்டோ
?